Wednesday, 5 April 2017

அ  ணு அளவில்
ஆ  ழமாய் பதிகிறாய்...!
இ  தழை சுழித்து இதயத்தில்
ஈ  ட்டி பாய்க்கிறாய்...!
உ  யிரே உயிரின் உள்ளே
ஊ  ஞ்சல் ஆடுகிறாய்...!
எ  ந்தன் நெஞ்சில் முகம் புதைக்கிறாய்
ஏ  க்கம் கூட்டி என்னை வதைக்கிறாய்...!
ஐ  யம் கொண்டு அலைகிறேன் அன்பே
ஒ  ரு நிமிட பிரிவை கூட ஏற்பேனோ...?
ஓ  யாமல் உன்னை என்னை பரிதவிப்பேனோ...?
ஒள டதமாய் வா என் அழகியே...!

==>
இவன்,
நிலவின் நண்பன்...!

Monday, 3 April 2017

ஏ... இதயமே...
நீ அவளுக்காக தான் துடிக்கிறாய்
என்பதை அவள் நன்கு அறிவாள்...!

அதை ஏன்
அவள் நெருங்குகையில்
உரக்க துடித்து
உரைக்கிறாய் அவளுக்கு...!!??

==>
இவன்,
நிலவின் நண்பன்...!

Tuesday, 28 March 2017

கண்ணீர் கண்களில் காதல் வழிகின்றதே...
காணும் இடமெல்லாம் கலர்மழை பொழிகின்றதே...!
கைகளின் வழியே கவிதை விழுகின்றதே..
கனவுகளில் கூட அவள் முகம் எழுகின்றதே...!

புவியீர்ப்பு விசைக்கு
எதிர் விசை கிடைத்ததே...!
பூமியில் இருந்து விண்ணுக்கு
புது திசை பிறந்ததே...!

புயலாய் என்னை கடந்து சென்றாய்
பூமழை பொழிகிறதடி எனக்குள்ளே...!
கயல்விழி பார்வை காந்தத்தினால்
என்னை இழுக்கிறாய் உனக்குள்ளே...!

முடியும் வரை
முயன்று பார்க்கிறேன்...
முடிவில் உன்னில்
மூழ்கிபோகிறேன்...!

==>
இவன்,
நிலவின் நண்பன்...!

Thursday, 23 March 2017

குழல் இனிது... யாழ் இனிது...
இனி பொய்யாகும்...! - அவள்
குரல் இனிது கூச்சலும் இனிது
இனி மெய்யாகும்...!

செல் போன் சினுங்களும் ...
அலைபேசி அழைப்புகளும் ...
அர்த்தமற்ற நாட்களையே
அழகாக்க....
என்னோடு என்னவள் இருந்தால்....
என் தமிழால் கூட முடியாது
எங்கள் வாழ்க்கையை
வர்ணிக்க...!

==>
இவன்
நிலவின் நண்பன்...!



Tuesday, 21 March 2017

கவிதையாய் விழித்தாள்...!
கவி என்னுள் விதைத்தாள்...!
நாணத்தால் நங்கை முகம் புதைத்தாள்...!
அன்றே என்
ஆண் கர்வம் அழித்தாள்...!

வாழ்க்கை ஒரு வினாத்தாள்...!
அவளே அதற்க்கு விடைத்தாள்...!
வரமாய் எனக்கு கிடைத்தாள்...!
வலிகளை எல்லாம் உடைத்தாள்...!

மழையாய் விழுந்தாள்...!
மண் மனம் நனைத்தாள்...!
மறைவாய் சிரித்தாள்...!
மண் மணம் கொடுத்தாள்...!

கோர்வையாய் கதை பேசும்
பார்வைகள்....! - குளிரிலும்
வேர்வை வரவழைக்கும்
போர்வைகள்...!

பார்த்தேன்...! வேர்த்தேன்...!
குழைந்தேன்...! விழைந்தேன்...!
வழிந்தேன்...! விழுந்தேன்...!

==>
இவன்...
நிலவின் நண்பன்...!

காதல் செய்பவனின் கவிதை
காதல் கவிதையாக இருக்கும்...!
கவிதைக்காரனின் காதல்...?
கவிதைக்காதலாக இருக்கும்...!
இதோ...
காதல் கவிதைகளுடன்
ஒரு கவிதைக்காதல்...!! ;)
இவன்...
நிலவின் நண்பன்...!

Wednesday, 18 January 2017

இதோ மறுமலர்ச்சி பிறக்கிறது...!

ஐயா அப்துல் கலாம் அவர்களே
நீங்கள் இப்போது இருந்திருக்க வேண்டும்...
உங்கள் பிள்ளைகள் தயாராகி விட்டார்கள்...

தலைவன் இல்லாமல் போராட
தயாராகி விட்டார்கள்...!
தனக்கென்றில்லாமல்
தாய்நாட்டிற்காக தரையிறங்கி விட்டார்கள்...!

வெள்ளை வே(வெ)ட்டி மக்களே...!
கருப்பு சிவப்பு வெள்ளை நீலம் மஞ்சள்
என்று எந்த அரசியல் கொடி சாயமும் இல்லாமல்....!
ஒரே ரத்தமாய்...
ஒன்றிணைந்த என் உடன் பிறப்புகளை பார்...!

எங்கள் சகோதரர்களோடு போராடிய சகோதரிகளுக்கு
இருள் கொடுத்து இன்னல் தந்தாய்...
அதை உடைத்தெறிந்து ...
ஒளி கொடுக்க உயர்ந்த எங்கள் கரங்களை
மெரினா கடற்கரை இனி பேசும்...!


நான் வளர்த்த பிள்ளையை தழுவ
எனக்கு தடையா...?
வந்து பார் எங்கள் ஊருக்கு...
என் காளைகளை எப்படி வளர்க்கிறேன் என்று
உனக்கு புரியும்...!

ஏறு தழுவும் எங்களை
தழுவி பார்...! தலை வணங்குவோம்...!
தட்டி பார்காதே...!

நீ பார்க்கும் காட்சிகள்
எங்கள் ஒற்றுமையின் ஒரு முன்னோட்டமே...!
உலகம் முழுவதும் உள்ள தமிழ் இனம்..
கொதித்து போய் இருக்கிறது ...!

நிலைமையை உணர்ந்துகொள்...!
எங்கள் உணர்வை கொல்லாதே...!

எங்கள் உரிமையினை மீட்க...
எங்கள் கலாச்சாரத்தை காக்க...
உரக்க கேட்போம்...!
கேளா செவிக்கு கேட்கும் வரை உரக்க கேட்போம்...!


==>
இவன்
நிலவின் நண்பன் , ஒரு தமிழன்...!




Tuesday, 10 January 2017

அடை மழையே வா..!

ஆடைக்குள் வீசும் குளிர் காற்றே...
கோடையில் கதை பேசும்
தென்னங்கீற்றே ...
நீ என்னை தழுவ தழுவ...
பாழாய் போன மனம் பழுதாக...
விழுந்தாய் என்னுள்ளே விழுதாக...!

எச்சில் ஒழுகும் குழந்தையாய்
மடியில் விழுகிறாய்...
மிச்சம் இருக்கும் உயிரையும்
உள்ளே உழுகிறாய் ...!

நம் விழி சேரா நேரங்களில்...
விரல் சேரா காலங்களில்...
கருகிய பயிராய்...
உருகியதே என் உயிர்...!

அன்பே...
அழைக்கிறேன் வா...!
அடை மழையாய் என்னை நனைத்துவிடு ...
பிழைக்கிறேன் வா...!

==>
இவன்,
நிலவின் நண்பன் !