Tuesday, 28 March 2017

கண்ணீர் கண்களில் காதல் வழிகின்றதே...
காணும் இடமெல்லாம் கலர்மழை பொழிகின்றதே...!
கைகளின் வழியே கவிதை விழுகின்றதே..
கனவுகளில் கூட அவள் முகம் எழுகின்றதே...!

புவியீர்ப்பு விசைக்கு
எதிர் விசை கிடைத்ததே...!
பூமியில் இருந்து விண்ணுக்கு
புது திசை பிறந்ததே...!

புயலாய் என்னை கடந்து சென்றாய்
பூமழை பொழிகிறதடி எனக்குள்ளே...!
கயல்விழி பார்வை காந்தத்தினால்
என்னை இழுக்கிறாய் உனக்குள்ளே...!

முடியும் வரை
முயன்று பார்க்கிறேன்...
முடிவில் உன்னில்
மூழ்கிபோகிறேன்...!

==>
இவன்,
நிலவின் நண்பன்...!

No comments:

Post a Comment