Wednesday, 5 April 2017

அ  ணு அளவில்
ஆ  ழமாய் பதிகிறாய்...!
இ  தழை சுழித்து இதயத்தில்
ஈ  ட்டி பாய்க்கிறாய்...!
உ  யிரே உயிரின் உள்ளே
ஊ  ஞ்சல் ஆடுகிறாய்...!
எ  ந்தன் நெஞ்சில் முகம் புதைக்கிறாய்
ஏ  க்கம் கூட்டி என்னை வதைக்கிறாய்...!
ஐ  யம் கொண்டு அலைகிறேன் அன்பே
ஒ  ரு நிமிட பிரிவை கூட ஏற்பேனோ...?
ஓ  யாமல் உன்னை என்னை பரிதவிப்பேனோ...?
ஒள டதமாய் வா என் அழகியே...!

==>
இவன்,
நிலவின் நண்பன்...!

No comments:

Post a Comment