Thursday, 20 November 2014

நீ எங்கே ...?
வந்து சேர்ந்துவிடு என்னிடம்!
என் காதல்...
என்றும் இருக்கும் உன்னிடம்...!

என் உயிரே...
உள்ளுக்குள் உன் நினைவே...!
என் இதயத்தில்
என்றும் உன் துடிப்பே...! அன்பே!

கனவாகி போனாய் நீயே...
நீ கலைந்து விட கூடாதென
கண் மூடியே கிடக்கிறேன் நானே!

மூச்சாகி போனாய் நீயே...
உள்ளே இழுத்த உன்னை
விடமுடியாமல்...
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிரையே விடுகிறேன் நானே...!

உன்னை ஒருமுறை பார்ப்பேனோ...?
என் காதலை
உன் காலடியில் சேர்ப்பேனோ...?

நீ என் பெயரை உச்சரிக்க...
ஒருமுறை நானும் கேட்பேனோ...?
உலகில் ஒருநாள் நான்...
உனக்காய் மட்டும் வாழ்வேனோ...?

உன் முகம் பார்த்தே
இருந்த விழிகள்...
உன் மொழி கேட்டே
மகிழ்ந்த செவிகள்...

உன் விரல் பிடித்தே 
சிலிர்த்த கைகள்...
உன்னை தேடியே
நடந்த என் கால்கள்...

உன்னை காதலித்த
என் ஒவ்வொரு அணுக்களும் ...
உனக்காய் துடிக்குதுதடி...
உயிரே...
உள்ளிருந்து வெடிக்குதடி...!

இனி வரும் என் பொழுதுகள்...
உன்னுடன் இல்லை...
நீ கொண்ட காதல் விழுதுகள்...
என்னுடையதில்லை...
என்பதை...
எண்ணி பார்கவே
என்னால் முடியவில்லையடி...!

நான் கண்விழித்து
காதலித்த இரவுகள் ...
எனக்கு மட்டும்
இன்னும் விடியவில்லையடி ...!

உதட்டில் பொய்யாய் சிரிப்புடனும்...
உள்ளே உந்தன் நினைபுடனும்...
போலியாய் தினம்தினம் வாழ்கிறேனே...!
வலியால் நொடிநொடி அழுகிறேனே...!

நீ எங்கே ...?
வந்து சேர்ந்துவிடு என்னிடம்!
என் காதல்...
என்றும் இருக்கும் உன்னிடம்...!

இவன்,
நிலவின் நண்பன்!

Monday, 3 November 2014

கலைந்து போகும் மேகங்கள்
விண்ணில் கண்டேன்...
மறைந்து போகும் உறவுகள்
மண்ணில் கண்டேன்...

என்னோடு கைகோர்த்து
காலமெல்லாம் வருவாள்
என்று எண்ணிய முகம்...
இதோ என் எதிரே
கண்டும் காணாததுமாய்
கடந்து செல்ல...

இதோ பிரிந்து போகிறது
எந்தன் உயிர்
என் கண் முன்னே...

என் கைபிடித்து
தோல் சாய்ந்து...
ஒன்றாய் நடந்த காலங்களில்...
ஒற்றை நிமிடம் கூட..
என் கையை விட்டு விடாத அவள்...

இதோ கடந்து போகிறாள்
நான் யாரோ என்பது போல்...

அவள் அருகில் இருக்கும் போது...
பட பட வென துடித்த இதயம்...
இத்தனை வருடங்கள் கடந்தும்...
அதே படபடப்போடு !

அன்று அதை
நெஞ்சில் சாய்ந்து கேட்டு ரசித்த அவள்...
இன்று...
இதோ கடந்து போகிறாள்
நான் யாரோ என்பது போல்...

என் சட்டை காலர் பொத்தானும்...
தன்னை சுழற்றி விளையாடிய
விரல்கள்...
இன்று இருக்கமாய் போவதை
பார்த்தது ஏக்கத்துடன்...!

என்னவளின் அதே
சுவாசம் தரும் வாசம்...
என் நெஞ்சில் நிறைந்து ...
உறைந்து இருந்த நினைவுகளை
கண்களின் வழியே
காட்டி கொடுத்தது ...
கண்ணீர் துளிகளாய்!


என் கண்களில் தேங்கிய
கண்ணீர் துளிகளினூடே...
அவள் பிம்பம் ...
கொஞ்சம் கொஞ்சமாய் மறைய...

அந்த கண்ணீர் துளியும்
கீழே விழுந்து
தன்னை மரித்து கொண்டது...!

ஆம் ...!
என் என் என்னவள் தான்
என்னை கடந்து போகிறாள்...
நான் யாரோ என்பது போல்...!

இவன்,
நிலவின் நண்பன்!






Monday, 22 September 2014

உன்னை உனக்காக விட்டுக்கொடுக்கிறேன் ...
தினமும் அதற்காக
செத்து பிழைக்கிறேன்...!

கனவிலாவது உன்னை
காண நினைக்கிறேன்...
உறங்கவே முடியாமல்
உன்னால் தவிக்கிறேன்...!

உயிரே என் உயிரே
என்னிடம் திரும்பி வந்துவிடு...!
உன்னை நான் எப்படி மறப்பேன்...
என்னை திருப்பி தந்துவிடு...!

என் காலம் கரைந்து போகுதடி
கண்ணே கண்ணில் கண்ணீரோடு...!
என் இதயம் வலியில் நோகுதடி
உள்ளே உந்தன் நினைப்போடு...!

பிரசவ வேதனையும்
பத்து மாதம் தானடி ...
ஆயுள் வரை சுமப்பேனடி
அன்பே உன்னை...!

என்னை விட உன்னை ரசித்திட
எவனால் முடியும் இந்த உலகில்...!
இதை எப்படி சொல்லி புரியவைப்பேன்
கொஞ்சம் செவிகொடு அன்பே என்னிடத்தில்...!

நிலவே நீ தூங்கிட
மேகம் கொண்டு போர்வை நெய்திடுவேன்...
வியர்வை உனக்கு வருமானால்...
அந்த சூரியனை
கைதும் செய்திடுவேன்...!

இந்த உலகே எதிர்த்தாலும் வென்றிடுவேன்!
என்னோடு கை கோர்த்து நீ இருந்தால்!
ஆனால் நீயோ..
வேண்டாம் என்று சொல்லி விட்டாய்
என் காதலை
உன் காலடியில் கொன்றுவிட்டாய்...!

நீ சிரித்து பார்த்தே
பழக்கப்பட்டவன் நான்...
நீ புன்னகைக்க
நம் பிரிவு தான் உனக்கு
வேண்டும் என்றால்...

உன்னை உனக்காக விட்டுக்கொடுக்கிறேன் ...
தினமும் அதற்காக
செத்து பிழைக்கிறேன்...!

இவன்,

நிலவின் நண்பன் ...!

(செப்டம்பர் 22 2014)

Wednesday, 20 August 2014

என் இலை மனது...!
( உவமை )

'பருவ மழை' காலத்தில் ...
என் 'இலை மனசை'
நனைத்த
'காதல் மழைநீர்' என்னவளோ ...

'காலக்குழந்தை' கை தீண்ட...
சாரலாய் எனை பிரிந்து போனாளோ...

இதோ...
உனை  தேடி கொண்டு விழும்...
            என் 'இலைமனது'...

                          இவன் ,
                          நிலவின் நண்பன்





Tuesday, 5 August 2014


ஏன் இந்த இடைவெளி
நமக்குள் நண்பனே...!
உன் பிரிவை தாங்காமல்
உணர்கிறேன் துன்பமே...!

ஒரு கூட்டு கிளியாக
ஒன்றாய் வாழ்ந்த நாம்...
ஒவ்வொரு திசையில் பறந்து போனோம்
உணவுக்காக...!

இன்று உண்ணமுடியவில்லை நண்பா ...
உன்னை நினைக்கையில் ...!
பிடுங்கி தின்ன நீ இல்லாமல்
நடுங்கி தவிக்குதே என் மனம்!

தொண்டை குழியில்
உருண்டை சோறு...!
முரண்டு பண்ணுதே
பங்கு போட பங்காளி இல்லை என்று...!

வெள்ளித்திரை பார்க்கையில்
என் விழித்திரை கலங்குதடா என் நண்பா...!
என்னோடு விசிலடிக்க நீ இல்லை என்று...!

ஆட்டம் போட்டு உறங்கி போன இரவுகள்...
இன்று...
மயான அமைதியோடு மறைந்து போகிறது...!

எங்கோ உன் பெயர் கேட்க...
உள்ளுக்குள் சிரித்துக்கொள்கிறேன் ...
அப்படி ஒரு கிறுக்கன்
என் வாழ்வில் வந்தான் என்று...!


அடுத்த நொடியே நொந்து கொள்கிறேன்...
கால சுழலில் அவனும்...
கரைந்து போனான் என்று...!

தகவல் தொழில் நுட்பம் ...
வரைந்து கொண்டே போக...
நமக்குள் இருக்கும் இடைவெளி...
வளர்ந்து கொண்டே போவது ஏன்...?

அன்று...
எத்தனையோ மணி நேரங்கள்...
எதை எதையோ பேசி சிரித்தோம்...
இன்றோ...
என் அனைப்போடு
உன் அலைபேசி என் இருந்தும்...
ஏன் இந்த தயக்கம்...?

காரணம் இதுவோ...?

உன்னை விட்டு
ஒரு தடவை பிரிந்ததயே
தாங்கமுடியவில்லையே என்னால்...
ஒவ்வொரு அழைப்பிலும்
உன்னை பிரிய என்னால் முடியாதே...!

இன்றும் ...
எனக்கு ஏதும் சோகம் வந்தால்...
உன்னை நினைத்துக்கொள்கிறேன் ...!

நீ செய்த சேட்டைகள் ...
என் நெஞ்சில் ஓட்டையாகி ...
ஓடி போகின்றன என் துன்பங்கள் எல்லாம்...!

அன்று போல் இன்றும்...
நான் தனியாக நடப்பதில்லை...
என் நினைவோடு நீ இருக்கிறாயே...!

இவன்,
நிலவின் நண்பன் !

என் உயிர்  நட்பிற்கு
இது சமர்ப்பணம்...!



Monday, 28 July 2014

நான் குற்றவாளியே!

காலப்போக்கில் மாறிப்போன என்னவளே...
காயம் கண்டும் ...
கண்ணீர் தீர்ந்தும் காத்துகிடக்கிறேன் இன்னமுமே...!

உன்னை அலைபேசியில்
அழைத்த போதெல்லாம் நீ சொன்ன வார்த்தைகள்...
"என்னை மன்னித்துவிடு...! "

உண்மையில் குற்றம் செய்தவன் நானே!
உண்மையாக இருப்பதே குற்றம் தானே!

ஒரு பார்வை....
இரண்டு அலைபேசி எண்களின் இடமாற்றம்...
மூன்று நாட்களாய்
நான்கு மணிநேரம் நள்ளிரவு  பேச்சு...

ஐந்தாம் நாள் ஐநாக்ஸ் சினிமா...
ஆறாம் நாள் மெரினா ஓரம்...

ஏழாம் நாள் எல்லாம் போரடித்து...
எட்டாம் நாள் எட்டி உதைத்து விட்டு போகும்....
இந்த நவீன காதலுக்கு மத்தியில்...

பேசாமல் பார்க்காமல் ...
நினைவாலே உன்னுடன் வாழ்ந்த நான்...
கிறுக்கன் தான்!
குற்றவாளி தான்!

கரித்துண்டாய் என்னில் புதைந்த என் காதல்...
காலப்போக்கில்
வைரமானது...
பாவம் உனக்கெங்கு தெரியும்!

காற்றடித்தால் காணாமல் போகும்
சருகாகி போன
உன்... "உயிருக்கு உயிரான" காதலை ...
உணராமல் போன குற்றவாளி நான்!

நான் நானாக இருப்பதே குற்றம் தான்...
நான் என்ன செய்ய...



"நம் வாழ்கையை நமக்கு பிடித்தவர்களோடு
வாழாவிடின் ...
இந்த வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்?"
என்றென்னும் நான்
குற்றவாளியே ...

காலம் இருக்கையில் காதலித்து ...
பிரிவின் போது  புத்தி பேதலித்து ...
"எனக்கு முக்கியம் என் தாயா ??? நீயா??? " என்றாய்!

பாவம் நீ...
உனக்கு  எப்படி தெரியும்??
காதலை போராடி தான் பெற முடியும் என்று???

தியாகம் செய்வதாய் நினைத்துக்கொண்டு...
காதலை கண்ணீரோடு கரைத்து விட்டாய்!
கலைந்து போகும் மேகமாய் எண்ணி ...
என்னை நீ மறந்து விட்டாய்!

கேள்விகளோடு
கிறுக்கனாய் உன்னை எண்ணியே ...
உனக்காய் வாழ்ந்தவனுக்கு...

"விடை கொடுத்தாய் !"

விடைபெறமுடியாமல் தவிக்கும் நான்..
குற்றவாளியே...

"நீ என்னை மன்னித்துவிடு...!"

நானும் மாறபோவது இல்லை...
என் காதலும் சரி...

பாறையாகி போனது என் மனம் உன்னால்....
அதனால் தான் என்னவோ ...
இன்னமும் உன் காதல்
அழியாமல்...
எழுத்தாய் என் இதயப்பாறையில் ....!


இவன்,
நிலவின் நண்பன் !

Friday, 25 July 2014

இருபத்தி இரண்டு வருடங்கள் ...
நினைவுகளாய் என் நெஞ்சில் இன்று...

கடந்து வந்த பாதையை
ஒரு கணம் திரும்பி பார்க்கிறேன்!

கடந்த காலத்தை திரும்பி பார்த்து வாழ்பவன்...
என்றும் மாறுவதில்லை!

கடந்த காலத்திலேயே வாழ்பவன் ...
என்றும் முன்னேறுவதில்லை!

மழலை பருவம்....
குழல் ஓசையாய் நம் மனதில் என்றும்
இனித்து கொண்டே!

மின்வெட்டு காலங்களில்...
மாலை நேரங்களில்...

அம்மா மடியில் படுத்து கொண்டு...
அப்பா சொல்லும் கதைகளை கேட்டுக்கொண்டு ...
தங்கையை சீண்டி கொண்டு...

நட்சத்திரங்களை எண்ணி கொண்டே
உறங்கி போன காலங்கள்!

பேனா  தொலைந்து போனதுக்கும்...
வீட்டு பாடம் எழுதாமல் போனதுக்கும்...
பந்து வாங்கமுடியாமல் போனதுக்கும்...
சனிக்கிழமை அரை நாள் பள்ளிக்கூடத்துக்கும் மட்டும்...
கலங்கிய கண்கள்...!

மனதில் எந்த பாரமும் இல்லாமல் ...
புத்தக சுமையை மட்டும் சுமந்து...
நண்பர்களோடு...
இறக்கை இன்றி பறந்து போன
காலை நேரங்கள்!

கோலி.... கில்லி...
கல்லாட்டம்...
கோலாட்டம்...
கண்ணாம்பூச்சி....

கண்ணை மூடி யோசிக்கையில் ...
கடந்து போகின்றன அனைத்தும்
என் முன்னே...

நெஞ்சாங்குழியில் துக்கம் அடைக்க...
உள்ளே...
ஏதோ ஒரு மூலையில் ...
அந்த மழலை பருவம் மறைந்திருக்க ...

அந்த  பொக்கிஷ நினைவுகள்...
ஆனந்த பூங்காற்றாய்...
காலபோக்கில் கல்லாய் போன
இந்த இதயத்தை தழுவி கொண்டே...!

இவன்,
நிலவின் நண்பன் !

எனது கிறுக்கல்கள் தொடரும்...

http://nilavinnanban.blogspot.in/

நண்பர்களே ...
உங்களின் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்...
இங்கே பதிவு செய்தால் .. மிக்க மகிழ்ச்சி...!











Thursday, 24 July 2014

வணக்கம் நண்பர்களே....

காலத்தின் ஓட்டத்தில் நான் சிறிது காலம்
காணமல் போனது உண்மை தான்...

என்னை தேடி எனது பயணங்கள் எங்கெங்கோ சென்று
இறுதியில் என்னை திரும்ப பெற்றேன்...

யாரோ நடந்து சென்ற
தடத்தை பின் பற்றி செல்ல ...
கடைசி வரை...
காணவில்லை என்
கனவுகளின் எல்லை...

இறுதியில் ...
நானாக நடந்தால் தான்
தானாக பாதை வரும்
என்பதை உணர்ந்தேன்...

நடக்க தொடங்கிவிட்டேன்...
வழித்துணை யாரும் இல்லை...
ஒளித்துணையும் எனக்கு இல்லை...

இருட்டில் நடக்க பழகிக்கொண்டேன்...
இது தான் உலகம் என
உணர்ந்தும் கொண்டேன்...

முட்கள் மீது நடந்த எனக்கு
கற்கள் மீது நடக்க
கஷ்டமா என்ன?

தவறி விழுந்த நான் ...
தானாக எழுந்தேன்...
தூக்கி விட யாரும் இல்லை...
துவண்டு போகும் ஆள்
நானும் இல்லை!

எதிர் காற்று எவ்வளவு வேகம் அடித்தாலும்
என் வேகத்தை குறைக்க முடியாது...

எத்தனை தடுப்பு சுவர் எதிரே இருந்தாலும் ...
என்னை அது தடுக்க முடியாது...

முட்டி மோத நான் தொடங்கிவிட்டேன்...
முழு மனதுடன் இறங்கி விட்டேன்...

இனி இன்னல்கள் எத்தனை வந்தாலும் ...
தொடரும் என் பயணம்...
என் கனவுகளை தேடி...!


இவன் ,
நிலவின் நண்பன் ! ஜூலை 24 2014 19:20