Friday, 25 July 2014

இருபத்தி இரண்டு வருடங்கள் ...
நினைவுகளாய் என் நெஞ்சில் இன்று...

கடந்து வந்த பாதையை
ஒரு கணம் திரும்பி பார்க்கிறேன்!

கடந்த காலத்தை திரும்பி பார்த்து வாழ்பவன்...
என்றும் மாறுவதில்லை!

கடந்த காலத்திலேயே வாழ்பவன் ...
என்றும் முன்னேறுவதில்லை!

மழலை பருவம்....
குழல் ஓசையாய் நம் மனதில் என்றும்
இனித்து கொண்டே!

மின்வெட்டு காலங்களில்...
மாலை நேரங்களில்...

அம்மா மடியில் படுத்து கொண்டு...
அப்பா சொல்லும் கதைகளை கேட்டுக்கொண்டு ...
தங்கையை சீண்டி கொண்டு...

நட்சத்திரங்களை எண்ணி கொண்டே
உறங்கி போன காலங்கள்!

பேனா  தொலைந்து போனதுக்கும்...
வீட்டு பாடம் எழுதாமல் போனதுக்கும்...
பந்து வாங்கமுடியாமல் போனதுக்கும்...
சனிக்கிழமை அரை நாள் பள்ளிக்கூடத்துக்கும் மட்டும்...
கலங்கிய கண்கள்...!

மனதில் எந்த பாரமும் இல்லாமல் ...
புத்தக சுமையை மட்டும் சுமந்து...
நண்பர்களோடு...
இறக்கை இன்றி பறந்து போன
காலை நேரங்கள்!

கோலி.... கில்லி...
கல்லாட்டம்...
கோலாட்டம்...
கண்ணாம்பூச்சி....

கண்ணை மூடி யோசிக்கையில் ...
கடந்து போகின்றன அனைத்தும்
என் முன்னே...

நெஞ்சாங்குழியில் துக்கம் அடைக்க...
உள்ளே...
ஏதோ ஒரு மூலையில் ...
அந்த மழலை பருவம் மறைந்திருக்க ...

அந்த  பொக்கிஷ நினைவுகள்...
ஆனந்த பூங்காற்றாய்...
காலபோக்கில் கல்லாய் போன
இந்த இதயத்தை தழுவி கொண்டே...!

இவன்,
நிலவின் நண்பன் !

எனது கிறுக்கல்கள் தொடரும்...

http://nilavinnanban.blogspot.in/

நண்பர்களே ...
உங்களின் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்...
இங்கே பதிவு செய்தால் .. மிக்க மகிழ்ச்சி...!











No comments:

Post a Comment