Thursday, 24 July 2014

வணக்கம் நண்பர்களே....

காலத்தின் ஓட்டத்தில் நான் சிறிது காலம்
காணமல் போனது உண்மை தான்...

என்னை தேடி எனது பயணங்கள் எங்கெங்கோ சென்று
இறுதியில் என்னை திரும்ப பெற்றேன்...

யாரோ நடந்து சென்ற
தடத்தை பின் பற்றி செல்ல ...
கடைசி வரை...
காணவில்லை என்
கனவுகளின் எல்லை...

இறுதியில் ...
நானாக நடந்தால் தான்
தானாக பாதை வரும்
என்பதை உணர்ந்தேன்...

நடக்க தொடங்கிவிட்டேன்...
வழித்துணை யாரும் இல்லை...
ஒளித்துணையும் எனக்கு இல்லை...

இருட்டில் நடக்க பழகிக்கொண்டேன்...
இது தான் உலகம் என
உணர்ந்தும் கொண்டேன்...

முட்கள் மீது நடந்த எனக்கு
கற்கள் மீது நடக்க
கஷ்டமா என்ன?

தவறி விழுந்த நான் ...
தானாக எழுந்தேன்...
தூக்கி விட யாரும் இல்லை...
துவண்டு போகும் ஆள்
நானும் இல்லை!

எதிர் காற்று எவ்வளவு வேகம் அடித்தாலும்
என் வேகத்தை குறைக்க முடியாது...

எத்தனை தடுப்பு சுவர் எதிரே இருந்தாலும் ...
என்னை அது தடுக்க முடியாது...

முட்டி மோத நான் தொடங்கிவிட்டேன்...
முழு மனதுடன் இறங்கி விட்டேன்...

இனி இன்னல்கள் எத்தனை வந்தாலும் ...
தொடரும் என் பயணம்...
என் கனவுகளை தேடி...!


இவன் ,
நிலவின் நண்பன் ! ஜூலை 24 2014 19:20



No comments:

Post a Comment