Monday, 22 September 2014

உன்னை உனக்காக விட்டுக்கொடுக்கிறேன் ...
தினமும் அதற்காக
செத்து பிழைக்கிறேன்...!

கனவிலாவது உன்னை
காண நினைக்கிறேன்...
உறங்கவே முடியாமல்
உன்னால் தவிக்கிறேன்...!

உயிரே என் உயிரே
என்னிடம் திரும்பி வந்துவிடு...!
உன்னை நான் எப்படி மறப்பேன்...
என்னை திருப்பி தந்துவிடு...!

என் காலம் கரைந்து போகுதடி
கண்ணே கண்ணில் கண்ணீரோடு...!
என் இதயம் வலியில் நோகுதடி
உள்ளே உந்தன் நினைப்போடு...!

பிரசவ வேதனையும்
பத்து மாதம் தானடி ...
ஆயுள் வரை சுமப்பேனடி
அன்பே உன்னை...!

என்னை விட உன்னை ரசித்திட
எவனால் முடியும் இந்த உலகில்...!
இதை எப்படி சொல்லி புரியவைப்பேன்
கொஞ்சம் செவிகொடு அன்பே என்னிடத்தில்...!

நிலவே நீ தூங்கிட
மேகம் கொண்டு போர்வை நெய்திடுவேன்...
வியர்வை உனக்கு வருமானால்...
அந்த சூரியனை
கைதும் செய்திடுவேன்...!

இந்த உலகே எதிர்த்தாலும் வென்றிடுவேன்!
என்னோடு கை கோர்த்து நீ இருந்தால்!
ஆனால் நீயோ..
வேண்டாம் என்று சொல்லி விட்டாய்
என் காதலை
உன் காலடியில் கொன்றுவிட்டாய்...!

நீ சிரித்து பார்த்தே
பழக்கப்பட்டவன் நான்...
நீ புன்னகைக்க
நம் பிரிவு தான் உனக்கு
வேண்டும் என்றால்...

உன்னை உனக்காக விட்டுக்கொடுக்கிறேன் ...
தினமும் அதற்காக
செத்து பிழைக்கிறேன்...!

இவன்,

நிலவின் நண்பன் ...!

(செப்டம்பர் 22 2014)

No comments:

Post a Comment