Tuesday, 28 March 2017

கண்ணீர் கண்களில் காதல் வழிகின்றதே...
காணும் இடமெல்லாம் கலர்மழை பொழிகின்றதே...!
கைகளின் வழியே கவிதை விழுகின்றதே..
கனவுகளில் கூட அவள் முகம் எழுகின்றதே...!

புவியீர்ப்பு விசைக்கு
எதிர் விசை கிடைத்ததே...!
பூமியில் இருந்து விண்ணுக்கு
புது திசை பிறந்ததே...!

புயலாய் என்னை கடந்து சென்றாய்
பூமழை பொழிகிறதடி எனக்குள்ளே...!
கயல்விழி பார்வை காந்தத்தினால்
என்னை இழுக்கிறாய் உனக்குள்ளே...!

முடியும் வரை
முயன்று பார்க்கிறேன்...
முடிவில் உன்னில்
மூழ்கிபோகிறேன்...!

==>
இவன்,
நிலவின் நண்பன்...!

Thursday, 23 March 2017

குழல் இனிது... யாழ் இனிது...
இனி பொய்யாகும்...! - அவள்
குரல் இனிது கூச்சலும் இனிது
இனி மெய்யாகும்...!

செல் போன் சினுங்களும் ...
அலைபேசி அழைப்புகளும் ...
அர்த்தமற்ற நாட்களையே
அழகாக்க....
என்னோடு என்னவள் இருந்தால்....
என் தமிழால் கூட முடியாது
எங்கள் வாழ்க்கையை
வர்ணிக்க...!

==>
இவன்
நிலவின் நண்பன்...!



Tuesday, 21 March 2017

கவிதையாய் விழித்தாள்...!
கவி என்னுள் விதைத்தாள்...!
நாணத்தால் நங்கை முகம் புதைத்தாள்...!
அன்றே என்
ஆண் கர்வம் அழித்தாள்...!

வாழ்க்கை ஒரு வினாத்தாள்...!
அவளே அதற்க்கு விடைத்தாள்...!
வரமாய் எனக்கு கிடைத்தாள்...!
வலிகளை எல்லாம் உடைத்தாள்...!

மழையாய் விழுந்தாள்...!
மண் மனம் நனைத்தாள்...!
மறைவாய் சிரித்தாள்...!
மண் மணம் கொடுத்தாள்...!

கோர்வையாய் கதை பேசும்
பார்வைகள்....! - குளிரிலும்
வேர்வை வரவழைக்கும்
போர்வைகள்...!

பார்த்தேன்...! வேர்த்தேன்...!
குழைந்தேன்...! விழைந்தேன்...!
வழிந்தேன்...! விழுந்தேன்...!

==>
இவன்...
நிலவின் நண்பன்...!

காதல் செய்பவனின் கவிதை
காதல் கவிதையாக இருக்கும்...!
கவிதைக்காரனின் காதல்...?
கவிதைக்காதலாக இருக்கும்...!
இதோ...
காதல் கவிதைகளுடன்
ஒரு கவிதைக்காதல்...!! ;)
இவன்...
நிலவின் நண்பன்...!