Friday, 5 August 2016

ஏ.. கம்மலே...
அதிகம் ஆடாதே...
அவள் காதோரம் கதை பேசும் ஆணவமோ...?!

ஏ... கொலுசே...
ஜல் ஜல் சத்தம் கொஞ்சம் அதிகம் தான்...
அவள் காலோரம் இடம் கிடைத்த ஆனந்தமோ...?!

இருக்க தானே செய்யும்...
இவள் அருகில் இடம் கிடைக்க
எத்தனை ஜென்ம தவமோ..?

நான் இன்னும் எட்டி நின்று தான்
என்னவளை ரசித்து கொண்டிருக்கிறேன்...
இருந்தும் என்னை போல்
இன்புற்றவன் எவனும் இல்லை...

அவளின் கனவுகளோடு
விடியும் காலைகள்...
பல் விலக்காமல் கூட...
பல் இளித்து கொண்டே நகர்கின்றன ...

சட்டை பட்டனை மாற்றி பூட்டினேன்...
சைக்கிளை நின்ற இடத்திலே ஓட்டினேன் ...

கண்கள் விண்ணை நோக்கியே...
காலம் கனவை தேக்கியே - அவள்
புன்னகை என்னை தாக்கியே...
போகிறது இருளை போக்கியே...!

பட்டாம்பூச்சியை பார்த்த
பிள்ளையாய் ...
துள்ளி கொண்டு போகிறேன்...
அவள் வாசனையை நெஞ்சோடு
அள்ளி கொண்டு போகிறேன்...

அவள் வாசனையை வெளியிடாமல்
மூச்சை அடக்கி
நான் செய்யும் போராட்டம்
இன்பமே...
அவளை காணாத கன நேரமும்
துன்பமே...!

பின்னணியில் இசையோடவே
போகிறது என் வாழ்க்கை..! - அவள்
இருக்கும் திசையோடவே
போகிறது என் கால் கை ...!

இவன்,
நிலவின் நண்பன்..!



No comments:

Post a Comment