Wednesday, 10 June 2015

திருவிழா கூட்டத்தில்
அம்மாவின் கையை நழுவவிட்ட
குழந்தையின் நிலை உனக்கு புரியும்...
அந்த அம்மாவின் வலி உனக்கு தெரியுமா...?
என் இடத்தில் இருந்து பார்
என் என்னவளே...!

உன்னை எங்கு எப்போது தொலைத்தேன்
என்றே தெரியவில்லை எனக்கு...
பின்பு எப்படி உன்னை நான் தேடி கண்டுபிடிக்க ...?

திரும்ப கிடைத்த குழந்தை
அம்மாவை பார்த்து நீ யார் என்று கேட்டால் ...?
ஆனால்  நீ கேட்டாயடி...!
அந்த வலியை
வார்த்தைகளால் எப்படி சொல்ல...?

ஒன்றாய் கை கோர்த்து நடப்போம் என்று
கற்பனையில் வாழ்ந்து கொண்டே...
நிஜத்தில் உன் கையை விட்டு விட்டேனோ...?

==>
இவன்,
நிலவின் நண்பன்...!

No comments:

Post a Comment