Monday, 22 June 2015

போ மச்சான் போ போ ...
இந்த பொண்ணுங்கள பாக்காத...
வெச்சிடுவா பொலம்ப
நீ கிட்ட கூட சேக்காத ...!

ஒரு முறை தான் உன்ன பாத்து
lightaa அவ சிரிப்பா...
உன்னோட கதைய
quieta தான முடிப்பா..

படத்தோட பதினொன்னு நீயாகி போவ...
செத்தாலும் அவளையே ...
நெனச்சு தான சாவ...!

தண்ணின்னு நெனச்சு
தல கீழ dive அடிப்ப...
மச்சி... பாராங்கல்லுடா ...
அவ மனசு...
பாழுங் கிணறு டா...

சிக்கிடாத..
செதறிடாத...
அப்புறம் சரக்கடிச்சி...
என்ன சாவடிகாத...

போ மச்சான் போ போ ...
இந்த பொண்ணுங்கள பாக்காத...
வெச்சிடுவா பொலம்ப
நீ கிட்ட கூட சேக்காத ...!

==>
இவன்,
நிலவின் நண்பன் !

Wednesday, 10 June 2015

திருவிழா கூட்டத்தில்
அம்மாவின் கையை நழுவவிட்ட
குழந்தையின் நிலை உனக்கு புரியும்...
அந்த அம்மாவின் வலி உனக்கு தெரியுமா...?
என் இடத்தில் இருந்து பார்
என் என்னவளே...!

உன்னை எங்கு எப்போது தொலைத்தேன்
என்றே தெரியவில்லை எனக்கு...
பின்பு எப்படி உன்னை நான் தேடி கண்டுபிடிக்க ...?

திரும்ப கிடைத்த குழந்தை
அம்மாவை பார்த்து நீ யார் என்று கேட்டால் ...?
ஆனால்  நீ கேட்டாயடி...!
அந்த வலியை
வார்த்தைகளால் எப்படி சொல்ல...?

ஒன்றாய் கை கோர்த்து நடப்போம் என்று
கற்பனையில் வாழ்ந்து கொண்டே...
நிஜத்தில் உன் கையை விட்டு விட்டேனோ...?

==>
இவன்,
நிலவின் நண்பன்...!

Tuesday, 9 June 2015

உன்னுடன் நான் இருந்த காலத்தை
"இறந்தகாலம்" என்று யார் சொன்னார்கள் ???
அது என்றும் என்னுள் வாழுமடி ...
நான் இருக்கும் வரை ...
என் நினைவு இருக்கும் வரை ...
கோடைகால நிழலாய் ...
குழந்தையின் சிரிப்பாய் ...
மழைமண் வாசனையாய் ...
மயில் இறகின் வருடலாய் ...
கண்களை நனைக்கும்
அந்த பாடல்களாய்...


==>
இவன்,
நிலவின் நண்பன்...!