Monday, 9 February 2015

நிலவின் நினைவில்...!     -- 1

            அன்று பௌர்ணமி ! அழகிய நிலா அந்த விண்மீன் குளத்தில் தேவதையாய் நீந்தி கொண்டிருந்தாள். சில்லென காற்று சருகுகளை அடித்து செல்ல, தெருவிளக்கு கம்பத்தில் சாய்ந்து, அந்த நிலவையே பார்த்து கொண்டிருந்தான் சிவா.

"கண்ணில் என்ன தூசி பட்டுவிட்டதோ...?
துடிதுடித்து கொண்டிருந்தது,
அந்த தெருவிளக்கு!"

இவனுக்கும் அதே தூசி கண்ணில் பட்டுவிட்டதோ? சிவாவின் கைகள் அவன் கண்களை துடைத்து கொண்டே இருந்தது.

"நினைத்து நினைத்து பார்த்தேன்...!"
அலைபேசியில் இருந்து வந்து கொண்டிருந்தது அந்த பாடல் வரிகள்.
தன்னை மறந்து கண்களை மூடினான் சிவா. நெஞ்சங்குழியில் தேங்கி இருந்த நினைவுகள், தொண்டை குழியை அடைத்து கொண்டு இருந்தது.

"அவள் முகம்...
அவள் ஓரப்பார்வை...
அவள் உதட்டுசுழிப்பு...
அவள் கூந்தல்...
அவள் புன்னகை...
அவள் அழுகை...
அவள் விரல்கள்...
அவள் தீண்டல்...
அவள் சினுங்கல்..."

எல்லாம் சிவாவின் கண்முன்னே மின்னல் போல் தோன்றி மறைய, இதயத்தின் உள்ளே இடி இடிக்க, கண்களின் ஓரமோ கண்ணீர் மழை!

"ஆண்மகன் அழகூடாது தான்!
ஆனால் தாயாய் மாறி அவளை தன்னுள் தாங்கி நின்றானே!
அதனால் தான் அழுகிறானோ!"

அன்று அவளுடன் முதன் முதலாய் அலைபேசியில் பேசிக்கொண்டு , ஒய்யாரமாய் சாய்ந்து இருந்த அந்த தெருவிளக்கு, இன்றும் அவனை தாங்கி கொண்டு நின்றது.

"சிவா... சிவா...! அங்க என்னப்பா பண்ற...!"

அந்த கம்பத்தின் கதகதப்பில் சாய்ந்து இருந்த அவன், சட்டென கண்களை துடைத்து, அலைபேசியை காதில் வைத்து திரும்பினான். சிவாவின் அம்மா வீட்டு வாசலில் நின்றுகொண்டு அவனை அழைத்தாள்.

"இதோ வந்துட்டேன்மா!" உதட்டில் உண்மை சிரிப்பை வரவழைத்து கொண்டு வீட்டை நோக்கி நடந்தான் சிவா.

"உனக்காக தான் அப்பா சாப்பிடாம உக்காந்துட்டு இருக்கார். கேட்டா தம்பி வந்துடட்டும்னு சொல்றார்.."

"Friend  கிட்ட பேசிட்டு  இருந்தேன் மா... வா போலாம்... " என்று அம்மாவின் தோள் மீது கைவைத்து அம்மாவை தள்ளி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் சிவா!

- தொடரும்


No comments:

Post a Comment