Monday, 28 July 2014

நான் குற்றவாளியே!

காலப்போக்கில் மாறிப்போன என்னவளே...
காயம் கண்டும் ...
கண்ணீர் தீர்ந்தும் காத்துகிடக்கிறேன் இன்னமுமே...!

உன்னை அலைபேசியில்
அழைத்த போதெல்லாம் நீ சொன்ன வார்த்தைகள்...
"என்னை மன்னித்துவிடு...! "

உண்மையில் குற்றம் செய்தவன் நானே!
உண்மையாக இருப்பதே குற்றம் தானே!

ஒரு பார்வை....
இரண்டு அலைபேசி எண்களின் இடமாற்றம்...
மூன்று நாட்களாய்
நான்கு மணிநேரம் நள்ளிரவு  பேச்சு...

ஐந்தாம் நாள் ஐநாக்ஸ் சினிமா...
ஆறாம் நாள் மெரினா ஓரம்...

ஏழாம் நாள் எல்லாம் போரடித்து...
எட்டாம் நாள் எட்டி உதைத்து விட்டு போகும்....
இந்த நவீன காதலுக்கு மத்தியில்...

பேசாமல் பார்க்காமல் ...
நினைவாலே உன்னுடன் வாழ்ந்த நான்...
கிறுக்கன் தான்!
குற்றவாளி தான்!

கரித்துண்டாய் என்னில் புதைந்த என் காதல்...
காலப்போக்கில்
வைரமானது...
பாவம் உனக்கெங்கு தெரியும்!

காற்றடித்தால் காணாமல் போகும்
சருகாகி போன
உன்... "உயிருக்கு உயிரான" காதலை ...
உணராமல் போன குற்றவாளி நான்!

நான் நானாக இருப்பதே குற்றம் தான்...
நான் என்ன செய்ய...



"நம் வாழ்கையை நமக்கு பிடித்தவர்களோடு
வாழாவிடின் ...
இந்த வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்?"
என்றென்னும் நான்
குற்றவாளியே ...

காலம் இருக்கையில் காதலித்து ...
பிரிவின் போது  புத்தி பேதலித்து ...
"எனக்கு முக்கியம் என் தாயா ??? நீயா??? " என்றாய்!

பாவம் நீ...
உனக்கு  எப்படி தெரியும்??
காதலை போராடி தான் பெற முடியும் என்று???

தியாகம் செய்வதாய் நினைத்துக்கொண்டு...
காதலை கண்ணீரோடு கரைத்து விட்டாய்!
கலைந்து போகும் மேகமாய் எண்ணி ...
என்னை நீ மறந்து விட்டாய்!

கேள்விகளோடு
கிறுக்கனாய் உன்னை எண்ணியே ...
உனக்காய் வாழ்ந்தவனுக்கு...

"விடை கொடுத்தாய் !"

விடைபெறமுடியாமல் தவிக்கும் நான்..
குற்றவாளியே...

"நீ என்னை மன்னித்துவிடு...!"

நானும் மாறபோவது இல்லை...
என் காதலும் சரி...

பாறையாகி போனது என் மனம் உன்னால்....
அதனால் தான் என்னவோ ...
இன்னமும் உன் காதல்
அழியாமல்...
எழுத்தாய் என் இதயப்பாறையில் ....!


இவன்,
நிலவின் நண்பன் !

Friday, 25 July 2014

இருபத்தி இரண்டு வருடங்கள் ...
நினைவுகளாய் என் நெஞ்சில் இன்று...

கடந்து வந்த பாதையை
ஒரு கணம் திரும்பி பார்க்கிறேன்!

கடந்த காலத்தை திரும்பி பார்த்து வாழ்பவன்...
என்றும் மாறுவதில்லை!

கடந்த காலத்திலேயே வாழ்பவன் ...
என்றும் முன்னேறுவதில்லை!

மழலை பருவம்....
குழல் ஓசையாய் நம் மனதில் என்றும்
இனித்து கொண்டே!

மின்வெட்டு காலங்களில்...
மாலை நேரங்களில்...

அம்மா மடியில் படுத்து கொண்டு...
அப்பா சொல்லும் கதைகளை கேட்டுக்கொண்டு ...
தங்கையை சீண்டி கொண்டு...

நட்சத்திரங்களை எண்ணி கொண்டே
உறங்கி போன காலங்கள்!

பேனா  தொலைந்து போனதுக்கும்...
வீட்டு பாடம் எழுதாமல் போனதுக்கும்...
பந்து வாங்கமுடியாமல் போனதுக்கும்...
சனிக்கிழமை அரை நாள் பள்ளிக்கூடத்துக்கும் மட்டும்...
கலங்கிய கண்கள்...!

மனதில் எந்த பாரமும் இல்லாமல் ...
புத்தக சுமையை மட்டும் சுமந்து...
நண்பர்களோடு...
இறக்கை இன்றி பறந்து போன
காலை நேரங்கள்!

கோலி.... கில்லி...
கல்லாட்டம்...
கோலாட்டம்...
கண்ணாம்பூச்சி....

கண்ணை மூடி யோசிக்கையில் ...
கடந்து போகின்றன அனைத்தும்
என் முன்னே...

நெஞ்சாங்குழியில் துக்கம் அடைக்க...
உள்ளே...
ஏதோ ஒரு மூலையில் ...
அந்த மழலை பருவம் மறைந்திருக்க ...

அந்த  பொக்கிஷ நினைவுகள்...
ஆனந்த பூங்காற்றாய்...
காலபோக்கில் கல்லாய் போன
இந்த இதயத்தை தழுவி கொண்டே...!

இவன்,
நிலவின் நண்பன் !

எனது கிறுக்கல்கள் தொடரும்...

http://nilavinnanban.blogspot.in/

நண்பர்களே ...
உங்களின் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்...
இங்கே பதிவு செய்தால் .. மிக்க மகிழ்ச்சி...!











Thursday, 24 July 2014

வணக்கம் நண்பர்களே....

காலத்தின் ஓட்டத்தில் நான் சிறிது காலம்
காணமல் போனது உண்மை தான்...

என்னை தேடி எனது பயணங்கள் எங்கெங்கோ சென்று
இறுதியில் என்னை திரும்ப பெற்றேன்...

யாரோ நடந்து சென்ற
தடத்தை பின் பற்றி செல்ல ...
கடைசி வரை...
காணவில்லை என்
கனவுகளின் எல்லை...

இறுதியில் ...
நானாக நடந்தால் தான்
தானாக பாதை வரும்
என்பதை உணர்ந்தேன்...

நடக்க தொடங்கிவிட்டேன்...
வழித்துணை யாரும் இல்லை...
ஒளித்துணையும் எனக்கு இல்லை...

இருட்டில் நடக்க பழகிக்கொண்டேன்...
இது தான் உலகம் என
உணர்ந்தும் கொண்டேன்...

முட்கள் மீது நடந்த எனக்கு
கற்கள் மீது நடக்க
கஷ்டமா என்ன?

தவறி விழுந்த நான் ...
தானாக எழுந்தேன்...
தூக்கி விட யாரும் இல்லை...
துவண்டு போகும் ஆள்
நானும் இல்லை!

எதிர் காற்று எவ்வளவு வேகம் அடித்தாலும்
என் வேகத்தை குறைக்க முடியாது...

எத்தனை தடுப்பு சுவர் எதிரே இருந்தாலும் ...
என்னை அது தடுக்க முடியாது...

முட்டி மோத நான் தொடங்கிவிட்டேன்...
முழு மனதுடன் இறங்கி விட்டேன்...

இனி இன்னல்கள் எத்தனை வந்தாலும் ...
தொடரும் என் பயணம்...
என் கனவுகளை தேடி...!


இவன் ,
நிலவின் நண்பன் ! ஜூலை 24 2014 19:20