Wednesday, 26 December 2012

EN VAAZHKAI AVALODU...

வாழ்கை இப்படித்தான் வாழவேண்டும் அன்பே...!

அதிகாலை சூரியன் உன் விழியாக,
அந்தி மாலை தலையணை உன் மடியாக !

உன்னை ரசித்து ரசித்தே 
வாழ வேண்டும் ...
உன் கண்கள் பார்த்தே 
என் காலம் கழியவேண்டும் !

நீ வந்து என்னை எழுப்ப வேண்டும் 
விழிப்பே வந்தாலும்,
அதற்காக நான் உறங்க வேண்டும்!

குளிப்பதற்கு நான் அடம் பிடித்திட,
குழந்தையாய் எனை நீ அதட்டிட,
என் தலை கோதும் உன் விரல்கள்,
இறைவன் எனக்கே எனக்காய் கொடுத்த வரங்கள் !

நீ செய்யும் உணவே அமுதமடி எனக்கு,
அதை உன் கைகள் ஊட்ட 
வேறு என்ன வேண்டுமடி எனக்கு !

என் மடிமீது நீ அமர 
குழந்தைபோல் உன் கரங்கள் என்னை வளைத்திட 
தலையோடு தலை மோதிடுவாய் 
தடுமாறி போவேனடி நான் !

ஞாயிறு கூட வேலைக்கு போகவேண்டும் நான் 
வழி அனுப்ப நீ வருவாயே !

வீட்டுக்கு ஓடோடி நான் வர 
வாசலில் எனக்காக நீ காத்திருக்க...
உன் பார்வை ஒன்றே போதுமடி 
என் வாழ்வே அர்த்தம் கொள்ளுமடி !

என் காதோரம் உன் மூச்சு காற்று !
என் கையோடு உன் கை வாசம் !
என் சட்டையோடு உன் நெற்றி பொட்டு !

என்னவளே ...!
உன்னை ரசித்து ரசித்தே வாழவேண்டும் !
உன் கண்கள் பார்த்தே 
என் காலம் முடிய வேண்டும் ! 
                                     
                                               இவன் 
                                                     நிலவின் நண்பன் !         
                      

No comments:

Post a Comment