Friday, 5 August 2016

ஏ.. கம்மலே...
அதிகம் ஆடாதே...
அவள் காதோரம் கதை பேசும் ஆணவமோ...?!

ஏ... கொலுசே...
ஜல் ஜல் சத்தம் கொஞ்சம் அதிகம் தான்...
அவள் காலோரம் இடம் கிடைத்த ஆனந்தமோ...?!

இருக்க தானே செய்யும்...
இவள் அருகில் இடம் கிடைக்க
எத்தனை ஜென்ம தவமோ..?

நான் இன்னும் எட்டி நின்று தான்
என்னவளை ரசித்து கொண்டிருக்கிறேன்...
இருந்தும் என்னை போல்
இன்புற்றவன் எவனும் இல்லை...

அவளின் கனவுகளோடு
விடியும் காலைகள்...
பல் விலக்காமல் கூட...
பல் இளித்து கொண்டே நகர்கின்றன ...

சட்டை பட்டனை மாற்றி பூட்டினேன்...
சைக்கிளை நின்ற இடத்திலே ஓட்டினேன் ...

கண்கள் விண்ணை நோக்கியே...
காலம் கனவை தேக்கியே - அவள்
புன்னகை என்னை தாக்கியே...
போகிறது இருளை போக்கியே...!

பட்டாம்பூச்சியை பார்த்த
பிள்ளையாய் ...
துள்ளி கொண்டு போகிறேன்...
அவள் வாசனையை நெஞ்சோடு
அள்ளி கொண்டு போகிறேன்...

அவள் வாசனையை வெளியிடாமல்
மூச்சை அடக்கி
நான் செய்யும் போராட்டம்
இன்பமே...
அவளை காணாத கன நேரமும்
துன்பமே...!

பின்னணியில் இசையோடவே
போகிறது என் வாழ்க்கை..! - அவள்
இருக்கும் திசையோடவே
போகிறது என் கால் கை ...!

இவன்,
நிலவின் நண்பன்..!



Wednesday, 20 April 2016

போ என் காதலியே...!

காதல் தீபத்தை அனைத்து வைக்கிறேன்...!
இருட்டில் தொலைந்து போ காதலியே...!
என்னை மறந்து போ என் காதலியே...!

என் தங்கமே...
உள்ளே இருந்த உன்னை...
உருக்கி ஊற்றிவிட்டேன்...
கண்ணீரை வழியாக்கி...
பெற்றோரை பழியாக்கி...

அதற்கு நானே என்  மனதை
தீயில் சுட்டது...
தூங்காமல் கழிந்த அந்த
இரவுகளே அறியும் ...!

நீ அழகாய் சிரிக்கும்
அந்த ஒரு நினைவை மட்டும்
என்னிடம் விட்டு போ ...
உன் பிரிவு பரிசாய்...!

போ என் காதலியே...
நிம்மதியாய் போ...

என் இதயத்திற்கு
புரிய வைத்துவிட்டேன்...
நீ
எனக்கு(ள்) இல்லை என்று...!

==>
இவன்,
நிலவின் நண்பன்...!



Monday, 22 February 2016

என் கனவே... நீ யாரோ...?

காதுகளில் ஒலிக்கும் புல்லாங்குழலே...
கனவுகளில் கவர்ந்து போன
பெண் நிழலே...
நீ யாரோ..? நீ யாரோ...?

இளையராஜாவின் இன்னிசையோடு
இமை கனத்து கண்மூட..
நித்தம் நீயும் வந்து போகிறாய்
கனவுகளில் என்னோட...

என்னை தினமும்
தழுவி போகும் தென்றலே...
இன்று மையம் கொண்டாயடி
புயலாய் என் மனதில்...!

என் கனவே..!
கண் விழித்தும் உன் நினைவே!

உன் ஒர விழி பார்வையால்...
ஓங்கி அடித்தாயடி ...!
உடைந்தது என் இதய கூண்டின் பூட்டு!
சிறகடித்து பறக்கிறேன்...

உயர உயர பறக்கிறேன் அன்பே...
உன்னை தேடியே பறக்கிறேன் அன்பே...
உன் இதய கூண்டில் சிறைபட...!

உன் விழியும்...
உன் நிழலுமே...
என் கனவின் பதிவுகள்...
இதை கொண்டு...
என்று உன்னை கண்டுபுடிக்க...?

அதுவரை
கனவில் மட்டுமே உன்னை கண்டு
நான் பறிதவிக்க...

கரைகிறதடி காலம்...
கனவே நனவாய்...
நினைவெல்லாம் கனவாய்...!

 ==>
இவன்,
நிலவின் நண்பன்...!

 

Monday, 18 January 2016

ரயிலோர கவிதைகள்...!

ஒழுகிய மூக்குடன் 
அழுகும் குழந்தையின் 
கூக்குரல்...
ஓடும் ரயில் சத்தத்தில் 
ஒடுங்கி தான் போனது!

அது பசியா ?
இல்லை பாசாங்கா ?
என்பது 
அதனை வைத்து பிச்சை எடுக்கும் 
அதன் 'தாய்க்கே ' வெளிச்சம்...!

இவன்,
நிலவின் நண்பன்!