Wednesday, 20 August 2014
Tuesday, 5 August 2014
ஏன் இந்த இடைவெளி
நமக்குள் நண்பனே...!
உன் பிரிவை தாங்காமல்
உணர்கிறேன் துன்பமே...!
ஒரு கூட்டு கிளியாக
ஒன்றாய் வாழ்ந்த நாம்...
ஒவ்வொரு திசையில் பறந்து போனோம்
உணவுக்காக...!
இன்று உண்ணமுடியவில்லை நண்பா ...
உன்னை நினைக்கையில் ...!
பிடுங்கி தின்ன நீ இல்லாமல்
நடுங்கி தவிக்குதே என் மனம்!
தொண்டை குழியில்
உருண்டை சோறு...!
முரண்டு பண்ணுதே
பங்கு போட பங்காளி இல்லை என்று...!
வெள்ளித்திரை பார்க்கையில்
என் விழித்திரை கலங்குதடா என் நண்பா...!
என்னோடு விசிலடிக்க நீ இல்லை என்று...!

இன்று...
மயான அமைதியோடு மறைந்து போகிறது...!
எங்கோ உன் பெயர் கேட்க...
உள்ளுக்குள் சிரித்துக்கொள்கிறேன் ...
அப்படி ஒரு கிறுக்கன்
என் வாழ்வில் வந்தான் என்று...!
அடுத்த நொடியே நொந்து கொள்கிறேன்...
கால சுழலில் அவனும்...
கரைந்து போனான் என்று...!

வரைந்து கொண்டே போக...
நமக்குள் இருக்கும் இடைவெளி...
வளர்ந்து கொண்டே போவது ஏன்...?
அன்று...
எத்தனையோ மணி நேரங்கள்...
எதை எதையோ பேசி சிரித்தோம்...
இன்றோ...
என் அனைப்போடு
உன் அலைபேசி என் இருந்தும்...
ஏன் இந்த தயக்கம்...?
காரணம் இதுவோ...?
உன்னை விட்டு
ஒரு தடவை பிரிந்ததயே
தாங்கமுடியவில்லையே என்னால்...
ஒவ்வொரு அழைப்பிலும்
உன்னை பிரிய என்னால் முடியாதே...!
இன்றும் ...
எனக்கு ஏதும் சோகம் வந்தால்...
உன்னை நினைத்துக்கொள்கிறேன் ...!
நீ செய்த சேட்டைகள் ...
என் நெஞ்சில் ஓட்டையாகி ...
ஓடி போகின்றன என் துன்பங்கள் எல்லாம்...!
அன்று போல் இன்றும்...
நான் தனியாக நடப்பதில்லை...
என் நினைவோடு நீ இருக்கிறாயே...!
இவன்,
நிலவின் நண்பன் !
என் உயிர் நட்பிற்கு
இது சமர்ப்பணம்...!
Subscribe to:
Posts (Atom)