Monday, 18 November 2013

புது மழைச் சாரல் ...

புது மழைச்  சாரல் 
இளந்தளிர் மீது தெளிக்குது...

புதியதாய் பிறந்தது போல் 
என் மனம் இங்கு சிலிரிக்குது...




என்னை சுற்றி இருப்பது என்ன ??
பனி மூட்டமா ???
மேக கூடமா ???

வெள்ளை நிற கடலில் 
விழுந்தவன் போல் உணர்ந்தேன் நான்...

தரையில் விழுந்த மழை துளிகள் 
சிதறி ...
என்னை எட்டி பிடிக்க 
எழுந்தன...

பாவம் அதனால் முடியாமல் 
பரிதவித்து விழுந்தன...

அதை கண்டு 
கவலை கொண்ட நான் ,
அவற்றை பிடிக்க கைகளை நீட்டினேன்...

அம்மம்மா ...
என் கைகளில் பட்டது 
மழை கம்பிகளா ??
மின் கம்பிகளா ??

மின்சாரம் தாக்கியது போல் 
உணர்தேன் நான் ...

குளிரால் உடல் நடுங்க 
தெளிவாய் ஒற்றை நினைப்பில் ...

அங்கிருந்த மரங்கள் 
என் உள்ளதை உணர்ந்தது போல் 
தலை அசைக்க ...
அவற்றை நான் முறைக்க ...
கோபம் கொண்ட அவை 
தன இலைகளில் சேர்த்து வைத்த 
நீர் துளிகளை ,
என் மீது செல்லமாய் தெளிக்க..

அந்த மழை கால 
காலை நேரம்....
என்றும் இருக்கும் 
எந்தன் நெஞ்சின் ஓரம்...
                                                  ==> நிலவின் நண்பன் 
                                                             18/11/13
                                            

Tuesday, 12 November 2013

நீ இல்லாமல் நான் ...

இரவு நேர மெல்லிசை நீயானால்...
காலை நேர கதகதப்பு நீயானால்...
தலைகோதும் இளந்தென்றல் நீயானால்...
போதும் போதும் அதுபோதும் ...
அலைமோதும் என் நெஞ்சம் எப்போதும்...

உள்ளம் எங்கும் உன் நினைவுகள் தானே...
கண்கள் முழுவதும் உன் கனவுகள் தானே...

பிரிவும் ஒரு சுகம் தான்...
சுகமான சுமை தான் ...
அது இதமான வலி தான் ...
உணர்கிறேனடி என்  அன்பே...

எங்கோ உன் பெயர் கேட்க,
ஒரு நொடி உன்னை நினைத்து
எனக்குள் சிரிக்கும்
இனிமை எனக்கு போதுமே ...

பூமியை பெண் என்று சொன்னார்கள்...
ஏன் என எனக்கு தெரியாது..!
ஆனால் ...
மழை விட்டு ஓய்ந்த நேரங்களில்
மண் வாசத்தில்...
பெண் வாசத்தை...
உன் வாசத்தை ...
உணர்கிறேனடி அன்பே...

உனக்கு பிடித்த பாடல் வரிகளை
மனபாடம் செய்தேன்...
அதை பலமுறை எனக்குள் சொல்லி பார்த்து
ரசித்து பார்த்தேன்...

பொறா மை கொள்கிறேன் அந்த கவிஞன் மீது...
உனக்கு பிடித்த பாடல் வரிகளை படைத்தானே ...!

உன்னை பற்றி எண்ணிகொண்டிருந்தால் ...
இமைகள் கூட இமைக்க மறக்கின்றது ...
உயிரும் கூட கனக்கின்றது...!

எங்கும் உன் முகம்...
சுவாசமெல்லாம் உன் வாசம்...
எதிலும் உன் நினைவுதானடி,
ஏனடி பெண்ணே ஏனடி...

தனிமையில் நான் நடக்க ...
துணையாய் உன் நினைவிருக்க ...
மனசெல்லாம் உன் பிரிவு ஒலிக்குதடி...
மனம் வலிக்குதடி...

நீ எனக்கு நடந்த மாற்றமா ? ஏமாற்றமா ?
நீ என் வாழ்வில் வீசிய பூங்காற்றா ? புயல் காற்றா ?

                                            ==> நிலவின் நண்பன்
                                                     12-11-2013



Friday, 18 October 2013




விழியோரம் வழியும் கண்ணீரே 
நீயும் என்னை விட்டு 
விலகாதே...




அவள் ...

மழை துளிகளினூடே நடந்த 
ஒளிச்சிதறல் போல்...
என் கண்ணீர் துளிகளினூடே நடந்த 
 உயிர்சிதறல் அவளோ ...!



Monday, 11 March 2013



மழை வந்தால் 
ஜன்னலை சாத்தி விடாதே...
அது 
உன்னை காண வரும் 
என் கண்ணீராகவும் இருக்கலாம் ...!

Monday, 4 February 2013

சுடிதார் 


நிலவையும் 
வானவில் தழுவுமோ...?
அவள்..
சுடிதாரில் ...! 

       
கடிகாரமும் காதலும் ...


நிமிட முள்ளாய் அவன் ...
மணி முள்ளாய் அவள் ...
அவன் சுற்ற சுற்ற
அவளும் அசைந்து போகிறாள் ...
பின்னால் பெற்றோர் என்னும்
நொடி முள் இவர்களுக்காக
சுற்றி கொண்டிருப்பதை மறந்து ...