Wednesday, 26 December 2012

EN VAAZHKAI AVALODU...

வாழ்கை இப்படித்தான் வாழவேண்டும் அன்பே...!

அதிகாலை சூரியன் உன் விழியாக,
அந்தி மாலை தலையணை உன் மடியாக !

உன்னை ரசித்து ரசித்தே 
வாழ வேண்டும் ...
உன் கண்கள் பார்த்தே 
என் காலம் கழியவேண்டும் !

நீ வந்து என்னை எழுப்ப வேண்டும் 
விழிப்பே வந்தாலும்,
அதற்காக நான் உறங்க வேண்டும்!

குளிப்பதற்கு நான் அடம் பிடித்திட,
குழந்தையாய் எனை நீ அதட்டிட,
என் தலை கோதும் உன் விரல்கள்,
இறைவன் எனக்கே எனக்காய் கொடுத்த வரங்கள் !

நீ செய்யும் உணவே அமுதமடி எனக்கு,
அதை உன் கைகள் ஊட்ட 
வேறு என்ன வேண்டுமடி எனக்கு !

என் மடிமீது நீ அமர 
குழந்தைபோல் உன் கரங்கள் என்னை வளைத்திட 
தலையோடு தலை மோதிடுவாய் 
தடுமாறி போவேனடி நான் !

ஞாயிறு கூட வேலைக்கு போகவேண்டும் நான் 
வழி அனுப்ப நீ வருவாயே !

வீட்டுக்கு ஓடோடி நான் வர 
வாசலில் எனக்காக நீ காத்திருக்க...
உன் பார்வை ஒன்றே போதுமடி 
என் வாழ்வே அர்த்தம் கொள்ளுமடி !

என் காதோரம் உன் மூச்சு காற்று !
என் கையோடு உன் கை வாசம் !
என் சட்டையோடு உன் நெற்றி பொட்டு !

என்னவளே ...!
உன்னை ரசித்து ரசித்தே வாழவேண்டும் !
உன் கண்கள் பார்த்தே 
என் காலம் முடிய வேண்டும் ! 
                                     
                                               இவன் 
                                                     நிலவின் நண்பன் !         
                      
எங்கு உன்னை தொலைத்தேன் 
எனக்கே தெரியவில்லை...
தேடி தேடி பார்க்கிறேன்,
இன்னும் நீ கிடைக்கவில்லை...!
என் தேடல் மட்டும் என்றும் தொடரும்...!

NILAVIN NANBAN KAVIDHAIGAL



உன் அன்பு கிடைக்கும் என்று 
கருவிலேயே தெரிந்திருந்தால் 
பிறக்கும் போது கூட 

Tuesday, 18 December 2012

Thamizhukku thalai vanakkam ...
En thaaikku mudhal vanakkam ...
Iniye en kavidhaigalin thuvakkam ...
                 ==> NILAVIN NANBAN