என்னை தாண்டி போன தேவதையே ...
என் தேகமெல்லாம் சிலிர்க்குதே...
நீ சீண்டி போன என் மனதில்
புது பூக்கள் துளிர்க்குதே...
Ponds பவுடர் வாசம்
நெஞ்சமெல்லாம் நிறைய...
என் எடை எக்கச்சக்கமாய் குறைய...
பறக்கிறேன் பறக்கிறேன்
காற்றில் பறக்கிறேன் ...
மெல்ல மெல்ல கரைந்து
காற்றாய் பறக்கிறேன்...!
ஓரக்கண் பார்வைகள்
என்னை ஓங்கி அடிக்க ...
சிரிக்கிறேன் சிரிக்கிறேன்
ஒரு மாதிரி சிரிக்கிறேன் ...
ஒருவருக்கும் தெரியாமல்
ஒளிஞ்சு ஒளிஞ்சு சிரிக்கிறேன்...!
ஓராயிரம் புல்லாங்குழல்கள்
எனக்காய் மட்டும் இசைக்கும்
இனிமை இதுவோ...?
புத்தம் புது உலகில்
முதல் கால் பதிக்கும்
புதுமை இதுவோ...?
கடிகார நொடிகளே
மெல்ல சுற்றுங்கள் ...
மெல்ல சுற்றுங்கள் ...
சிறு பிள்ளை இவனை
காதல் காற்று அணைக்கட்டும்...!
வானத்து மேகங்கள்
வண்ண வண்ண ஓவியங்களாக ...
அவை மழையாய் இறங்கி
வண்ணத்தில் என்னை மூழ்கடிக்க ...
திணறுதே...
மூச்சு திணறுதே...
உயிர்
உள்ளுக்குள் எதையோ
உணருதே...!
==>
இவன்,
நிலவின் நண்பன் ...!