Thursday, 20 November 2014

நீ எங்கே ...?
வந்து சேர்ந்துவிடு என்னிடம்!
என் காதல்...
என்றும் இருக்கும் உன்னிடம்...!

என் உயிரே...
உள்ளுக்குள் உன் நினைவே...!
என் இதயத்தில்
என்றும் உன் துடிப்பே...! அன்பே!

கனவாகி போனாய் நீயே...
நீ கலைந்து விட கூடாதென
கண் மூடியே கிடக்கிறேன் நானே!

மூச்சாகி போனாய் நீயே...
உள்ளே இழுத்த உன்னை
விடமுடியாமல்...
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிரையே விடுகிறேன் நானே...!

உன்னை ஒருமுறை பார்ப்பேனோ...?
என் காதலை
உன் காலடியில் சேர்ப்பேனோ...?

நீ என் பெயரை உச்சரிக்க...
ஒருமுறை நானும் கேட்பேனோ...?
உலகில் ஒருநாள் நான்...
உனக்காய் மட்டும் வாழ்வேனோ...?

உன் முகம் பார்த்தே
இருந்த விழிகள்...
உன் மொழி கேட்டே
மகிழ்ந்த செவிகள்...

உன் விரல் பிடித்தே 
சிலிர்த்த கைகள்...
உன்னை தேடியே
நடந்த என் கால்கள்...

உன்னை காதலித்த
என் ஒவ்வொரு அணுக்களும் ...
உனக்காய் துடிக்குதுதடி...
உயிரே...
உள்ளிருந்து வெடிக்குதடி...!

இனி வரும் என் பொழுதுகள்...
உன்னுடன் இல்லை...
நீ கொண்ட காதல் விழுதுகள்...
என்னுடையதில்லை...
என்பதை...
எண்ணி பார்கவே
என்னால் முடியவில்லையடி...!

நான் கண்விழித்து
காதலித்த இரவுகள் ...
எனக்கு மட்டும்
இன்னும் விடியவில்லையடி ...!

உதட்டில் பொய்யாய் சிரிப்புடனும்...
உள்ளே உந்தன் நினைபுடனும்...
போலியாய் தினம்தினம் வாழ்கிறேனே...!
வலியால் நொடிநொடி அழுகிறேனே...!

நீ எங்கே ...?
வந்து சேர்ந்துவிடு என்னிடம்!
என் காதல்...
என்றும் இருக்கும் உன்னிடம்...!

இவன்,
நிலவின் நண்பன்!

Monday, 3 November 2014

கலைந்து போகும் மேகங்கள்
விண்ணில் கண்டேன்...
மறைந்து போகும் உறவுகள்
மண்ணில் கண்டேன்...

என்னோடு கைகோர்த்து
காலமெல்லாம் வருவாள்
என்று எண்ணிய முகம்...
இதோ என் எதிரே
கண்டும் காணாததுமாய்
கடந்து செல்ல...

இதோ பிரிந்து போகிறது
எந்தன் உயிர்
என் கண் முன்னே...

என் கைபிடித்து
தோல் சாய்ந்து...
ஒன்றாய் நடந்த காலங்களில்...
ஒற்றை நிமிடம் கூட..
என் கையை விட்டு விடாத அவள்...

இதோ கடந்து போகிறாள்
நான் யாரோ என்பது போல்...

அவள் அருகில் இருக்கும் போது...
பட பட வென துடித்த இதயம்...
இத்தனை வருடங்கள் கடந்தும்...
அதே படபடப்போடு !

அன்று அதை
நெஞ்சில் சாய்ந்து கேட்டு ரசித்த அவள்...
இன்று...
இதோ கடந்து போகிறாள்
நான் யாரோ என்பது போல்...

என் சட்டை காலர் பொத்தானும்...
தன்னை சுழற்றி விளையாடிய
விரல்கள்...
இன்று இருக்கமாய் போவதை
பார்த்தது ஏக்கத்துடன்...!

என்னவளின் அதே
சுவாசம் தரும் வாசம்...
என் நெஞ்சில் நிறைந்து ...
உறைந்து இருந்த நினைவுகளை
கண்களின் வழியே
காட்டி கொடுத்தது ...
கண்ணீர் துளிகளாய்!


என் கண்களில் தேங்கிய
கண்ணீர் துளிகளினூடே...
அவள் பிம்பம் ...
கொஞ்சம் கொஞ்சமாய் மறைய...

அந்த கண்ணீர் துளியும்
கீழே விழுந்து
தன்னை மரித்து கொண்டது...!

ஆம் ...!
என் என் என்னவள் தான்
என்னை கடந்து போகிறாள்...
நான் யாரோ என்பது போல்...!

இவன்,
நிலவின் நண்பன்!