புது மழைச் சாரல்
இளந்தளிர் மீது தெளிக்குது...
புதியதாய் பிறந்தது போல்
என் மனம் இங்கு சிலிரிக்குது...
என்னை சுற்றி இருப்பது என்ன ??
பனி மூட்டமா ???
மேக கூடமா ???
வெள்ளை நிற கடலில்
விழுந்தவன் போல் உணர்ந்தேன் நான்...
தரையில் விழுந்த மழை துளிகள்
சிதறி ...
என்னை எட்டி பிடிக்க
எழுந்தன...
பாவம் அதனால் முடியாமல்
பரிதவித்து விழுந்தன...
அதை கண்டு
கவலை கொண்ட நான் ,
அவற்றை பிடிக்க கைகளை நீட்டினேன்...
அம்மம்மா ...
என் கைகளில் பட்டது
மழை கம்பிகளா ??
மின் கம்பிகளா ??
மின்சாரம் தாக்கியது போல்
உணர்தேன் நான் ...
குளிரால் உடல் நடுங்க
தெளிவாய் ஒற்றை நினைப்பில் ...
அங்கிருந்த மரங்கள்
என் உள்ளதை உணர்ந்தது போல்
தலை அசைக்க ...
அவற்றை நான் முறைக்க ...
கோபம் கொண்ட அவை
தன இலைகளில் சேர்த்து வைத்த
நீர் துளிகளை ,
என் மீது செல்லமாய் தெளிக்க..
அந்த மழை கால
காலை நேரம்....
என்றும் இருக்கும்
எந்தன் நெஞ்சின் ஓரம்...
==> நிலவின் நண்பன்
18/11/13